×

போதை பொருள் எதிர்ப்பு உறுதிமொழி

 

ஈரோடு, ஆக.12: ஈரோடு மாநகராட்சி, குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையின் சார்பில், போதைப்பொருள் எதிர்ப்பு தொடர்பான விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியினை கலெக்டர் வாசிக்க பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில், உதவி ஆணையர் (கலால்) ஜீவரேகா, முதன்மைக்கல்வி அலுவலர் குழந்தைராஜன், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post போதை பொருள் எதிர்ப்பு உறுதிமொழி appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode Corporation ,Kumarankuttai Government High School ,Alcohol Prohibition ,Anti-Drug Department ,Dinakaran ,
× RELATED சுட்டெரிக்கும் வெயிலினால்...